முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)

தமிழாக்கம்

முன்னுரை: பொதுவாக உலக இஸ்லாமியர்கள் "முஸ்லீம்களை" மற்ற மார்க்கத்தவர்கள் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்லி வேதனையடைவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவில் நடந்த சில கலவரங்களைச் சொல்வார்கள், அமெரிக்கா போரில் கொன்ற பட்டியலை காட்டுவார்கள். இதில் எனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால், முஸ்லீம்களே மற்ற முஸ்லீம்களை கொன்று குவித்துள்ளார்கள் என்றுச் சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இக்கட்டுரையில் ஆசிரியர், ஈரான்-ஈராக் போர், பாகிஸ்தான்-பாங்களாதேஷ் போர் என்று பட்டியலிருகிறார். இந்த போர்களில், மற்றும் மற்ற தாக்குதல்களில் அதிகமாக மரித்தது யார்? முஸ்லீம்களே. மற்றவர்கள் முஸ்லீம்களை கொன்றது ஆயிரம் என்றால், முஸ்லீம்களே முஸ்லீம்களை கொன்றது பதினாயிரம். இக்கட்டுரையில் சொல்லப்படும் செய்தி, அமைதியான முறையில் வாழும் முஸ்லீம்களை குறித்து அல்ல, இஸ்லாமின் பெயரை வைத்துக்கொண்டு தாக்குதல்கள் நடத்தும் நபர்களை மட்டுமே குறிக்கும். ஒரு எதிரியை அல்லது நபரை பழி வாங்குவேன் என்றுச் சொல்லி, தன் சொந்த மக்களை பல நூறுபேரை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் நபர்களைப் பற்றி ஆசிரியர் எழுதுகிறார். இந்தியாவில் வாழும் பல முஸ்லீம்களும் அமைதியை விரும்புகிறார்கள், இப்படி தாக்குதல் நடத்தும் நபர்களை வெறுக்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கமுடியாது. இக்கட்டுரையின் மூலமாக இஸ்லாமிய சிறும்பான்மையினரை, பெண்களை காப்பாற்றும்படி இஸ்லாமியர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் வேண்டுதலை முன்வைக்கிறேன்.

கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்கிறது...


முஸ்லீம் vs. முஸ்லீம்

Muslim versus Muslim; Jews kill a Palestinian and its death to Israel

By: Lee Jay Walker Dip BA MA
 
பொதுவாக ஊடகங்கள்(Media) "இஸ்லாமிய ஊடகங்கள்" போல குறுகிய கண்ணொட்டத்தை உடையதாக தெரிகிறது. ஏன்?

ஈரான்-ஈராக் போர், சொமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி, ஈராக், ஈரானில் குர்தீஸ் மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், 1970 லிருந்து 4 மில்லியனுக்கு அதிகமான முஸ்லீம்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்கள்; 1982ல் சிரியாவில் 20,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்; கடந்த 12 வருடங்களாக 1,00,000 ஷியா முஸ்லீம்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்த உள்நாட்டு கலவரங்களால் கொல்லப்பட்டார்கள்.

பசியினாலும், அடிமைகளாகவும் வேதனை அனுபவித்து 2 மில்லியன் கிறிஸ்தவர்களும், அனிமிஸ்ட்களும் சூடான் நாட்டில் முக்கியமாக ஆப்ரிக்கர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படி இருந்தும், அரபியர்களும், முஸ்லீம்களும் "நாம் அனைவரும் சகோதரர்கள்" என்று சொல்கிறார்கள், மற்றும் பாலஸ்தீன அரபியர்களின் கவலை, ஒட்டு மொத்த மனித இனத்தின் மீது நடத்தப்படும் குற்றம் என்று சொல்கிறார்கள். ஆனால், சௌதி அரேபியாவில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுதல், சூடான் நாட்டில் உள்ள அடிமைத்தனம், முஸ்லீமல்லாதவர்களை கூண்டோடு அழித்தல், அல்ஜீரியாவில் நடக்கும் கொடுமை, எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் கொடுமை, மற்றும் அரேபியர்களால் துன்புறுத்தப்படும் இதர செயல்கள் எல்லாம் ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கண்களை நீங்கள் மூடிக்கொண்டு, ஊடகங்கள் சொல்லும் செய்திகளை மட்டும் கேட்பீர்களானால், இஸ்ரவேல் நாடும், மற்ற இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகவும் கொடுமையாளர்களாகவும், "இரத்தத்தை குடிக்கிறவர்களாகவும்" தென்படுவார்கள், இவர்களிடம் எப்போதும் துன்பத்தை அனுபவிப்பது முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும். ஆனால், உண்மை அது அல்ல. அது வேறு மாதிரியாக உள்ளது. ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சௌதி அரேபியாவில் இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்கு மாறுகிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானில் கற்பழிக்கப்படும் பெண்கள், சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள், ஏனென்றால், அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று நிருபிக்க நான்கு ஆண்களை சாட்சிகளாக கொண்டுவராததால். பாங்களாதேஷில் புத்தமதத்தவர்களும், பாகிஸ்தானில் "அஹமதி முஸ்லீம்களும்", சொமாலியாவில் கிறிஸ்தவர்களும், பாகிஸ்தானில் இந்துக்களும், மற்றும் பலர் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், அல்லது பல நிலைகளில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு மிகவும் கீழ்தரமாக நடத்தப்படுகிறார்கள். பாங்களாதேஷில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகமாகும் காரணத்தால், புத்தமத்ததவர்கள் அதிகமாக தாக்கப்படுகிறார்கள், அவர்கள் கோயில்கள் தரைமட்டமாக்கப்படுகிறது, மற்றும் இவர்களின் பெண்களை முஸ்லீம் ஆண்கள் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, 2002ல் இஸ்லாமிய நாடுகளில் வாழும் பெண் இனம் மிகவும் அதிக கொடுமைக்கு ஆளாகியது, மற்றும் ஹானர் கில்லின்க் (Honour Killing) என்ற கொலைகள் அதிகமாக பெருகியது, பொதுவாக ஊடகங்கள் இவைகளை மேற்கத்திய மக்களுக்கு மறைத்துவிட்டது. வடநைஜீரியாவிலிருந்தும், இந்தோனேஷியாவின் சில பாகங்களிலிருந்து கொடுமைகளை தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிய பல ஆயிர கிறிஸ்தவர்களின் செய்தியை எப்படி ஊடகங்கள் மறைத்ததோ அதே போல இவைகளையும் ஊடகங்கள் மறைத்துவிட்டது. சூடானிலும், மௌரிடானியாவிலும்(Mauritania) முஸ்லீம்கள் செய்யும் அடிமைத்தன கொடுமைகளை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கேள்விபட்டு இருக்கமாட்டீர்கள். ஏனென்றால், ஆப்ரிக்காவில் மூஸ்லீம்கள் மூலமாக நடக்கும் அடிமைத்தனம் அவ்வளவு முக்கியம் இல்லை. ஆனால், இதே ஒரு இஸ்ரவேல் நாடோ, அல்லது கிறிஸ்தவ நாடோ அடிமைத்தனத்தை ஆதரிப்பதாகவும், செயல்படுத்துவதாகவும் செய்தி வெளியானது என்று நினைத்துக்கொண்டால், அப்போது எவ்வளவு பலமாக அதற்கு எதிர்ப்பு வரும் என்று கற்பனை செய்து பார்க்கமுடியுமா?

ஒருவன் "உண்மை இஸ்லாம்" என்றால் என்ன என்றும், உண்மை இஸ்லாமிய சட்டம் என்ன என்றும் தெரிந்துக்கொள்ள விரும்பினால், அவன் சௌதி அரேபியாவிற்கு சென்று பார்க்கக்கடவன். உங்களோடு கூட புத்தமதத்தவர்களையும், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், யூதர்களையும், சீக்கியர்களையும், ஜொரோஸ்ட்ரியன்களையும், மற்ற மத நம்பிக்கையுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு சௌதி அரேபியாவிற்குச் சென்று, அங்குள்ள சௌதி குடிமக்களிடம் தங்கள் நம்பிக்கையைப் பற்றி சுதந்திரமாக பேசச் சொல்லுங்கள், பிறகு என்ன நடக்கும் என்று பாருங்கள்? அப்போது உங்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்றும், முகமதுவின் காலத்தில் இஸ்லாம் என்ன செய்தது என்றும், அது அப்படியே மக்கா மதினா இடங்களில் இன்றளவும் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை சுலபமாக புரியும். சௌதி அரேபியாவில் உள்ள உங்கள் நண்பரிடம் நீங்கள், உங்கள் மதத்தைப் பற்றி சௌதி மக்களிடம் சுதந்திரமாக பேசுங்கள் என்று சொல்லமுடியாது. அப்படி சொல்லி, உங்கள் மார்க்கத்திற்கு வரும் படி சௌதி மக்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது. அப்படி யாராவது மாறினால், அதன் விளைவு மரணம் தான்.

இவைகள் ஒருபுறமிருக்க, முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீம் சிறும்பான்மையினரையும், பெண்களையும், ஹோமொசெக்ஸுவல்களையும் கொடுமைபடுத்தும் நிலை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் "இஸ்ரவேலுக்கு மரணம்" என்ற கோஷங்கள் இஸ்லாமிய நாடுகளில் தொடர்கிறது. இவர்களுடைய முக்கிய நோக்கம் என்ன? தன்னிடம் எண்ணை வளம் அதிகமாக உள்ளதால் சௌதி அரேபியா இப்படி தான் என்ன நினைத்தாலும் செய்யமுடியும் என்று நினைக்கிறதா? அல்லது இஸ்லாமியர் அல்லாதவர்களாகிய "நாம்" எவ்வளவு நல்லவர்கள் என்று ஒன்றும் செய்யாமல் நாம் சும்மா இருப்பதாலேயா? (கிறிஸ்தவர்களும் மற்றும் இதர இஸ்லாமியரல்லாதவர்களும் "இஸ்லாமுக்கு பலிகடா ஆக்கப்படுகிறோம்"). அல்லது இவை இரண்டும் காரணமா?

உண்மை எதுவாக இருந்தாலும், இந்த நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று மட்டும் உண்மை. அது என்னவென்றால், ஒட்டு மொத்த கிறிஸ்தவ தலைவர்கள், தங்கள் மிதமிஞ்சிய அமைதியினால், மௌனத்தினால் முஸ்லீமல்லாதவர்களை காட்டிக்கொடுத்துள்ளார்கள்; மேற்கத்திய ஊடகங்கள் வெட்கப்படவேண்டும்.

"Whatever the "truth is," and of course it will be because of multiple factors, one reality remains and this is that Christian leaders have on the whole betrayed non-Muslims due to their overwhelming silence; and Western media should be ashamed of basic generalizations which should shame them. "

1970லிருந்து முஸ்லீம்கள் 4 மில்லியன் முஸ்லீம்களை கொன்று குவித்தது போல, அமெரிக்காவும் மூன்று போர்களில்(Cyprus, Bosnia, and Kosovo) இஸ்லாமுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு, அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானில் உள்ள அடிப்படைவாத இஸ்லாமுக்கு தங்கள் உதவியை கொடுத்துள்ளார்கள். ஆனால், இந்த இரண்டு நாடுகளும், ஈஸ்ட் டிமொரில் (East Timor) 1970 களில் கொள்ளப்பட்ட 2,00,000 (2 லட்சம்) கிறிஸ்தவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

எனவே, இஸ்லாமிய நாடுகளில் உள்ள "இஸ்லாமியரல்லாதவர்களுக்காவும், பெண்களுக்காகவும், இஸ்லாமிய சிறும்பான்மையினருக்காகவும்" யார் குரல் கொடுக்கப்போகிறார்கள். யாருமே இல்லை! ஆனால், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் இன்னும் அதிகவேகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்துக்கொண்டே இருக்கிறது.

ஆகையால், நான் புலம்புகிறேன், இதோ இன்னொரு முறை என் காதுகளில் இஸ்லாமிய ஊடகங்களிலிருந்தும், மேற்கத்திய ஊடகங்களிலிருந்தும் "இஸ்ரவேலுக்கு மரணம்" என்ற கோஷம் விழுகிறது.

Source: http://www.faithfreedom.org/Articles/Leejaywalker/muslim_vs_muslim.htm

கட்டுரை முற்றிற்று


என் பங்கிற்கு ஏதாவது விவரங்கள், தொடுப்புக்கள் கொடுக்கமுடியுமா என்று தேடிப்பார்த்தேன். எனக்கு கிடைத்த சில விவரங்களை கீழே தருகிறேன்.

1. பாகிஸ்தானில் பேநஜிர் புட்டோவை கொல்ல செய்யப்பட்ட தாக்குதல், 130 பேர் மரணம், பல நூறு பேர் காயம் - பெரும்பான்மையாக முஸ்லீம்கள் தானே... இந்தியாவில் ஹைதராபாத் மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் மரித்தவர்கள், அஜ்மீர் தர்காவில், மற்றும் இன்னும், உலகமனைத்திலும் ஷிய, சுன்னி முஸ்லீம்களின் மசூதிகளில் வெடிக்கும் குண்டுவெடிப்பில் மரிப்பவர்கள் யார்? முஸ்லீம்கள் தானே... யார் இவர்களை காப்பாற்றுவார்?

2. ரமளான் மாதத்தில் போர் செய்யக்கூடாது என்று முகமது சொன்னார் என்றுச் சொல்வார்கள், ஆனால், இந்த ஆண்டு ரமளான் மாதத்தில்:

Once again, Islam puts up big Ramadan numbers: 1,327 dead bodies in 282 terror attacks in 20 countries during its holiest month.

Source : http://www.thereligionofpeace.com/

3. ஒரு ஆண்டுக்கு 5000 பெண்கள் "ஹானர் கில்லின்க்" என்ற முறையில் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் எல்லாரும் இஸ்லாமிய பெண்கள் தான்.

The United Nations Population Fund estimates that the annual worldwide total of honor-killing victims may be as high as 5,000 women . Source: http://en.wikipedia.org/wiki/Honor_killing

4. ஈராக்-ஈரான் யுத்தத்தில் மரித்தவர்கள் (அ) காயப்பட்டவர்களின் புள்ளிவிவரங்கள்.

Source : http://en.wikipedia.org/wiki/Iran-Iraq_War

Casualties
Iran- Est. 500,000-750,000 soldiers/militia/civilians killed or wounded

Iraq- Est. 375,000-500,000 soldiers/militia/civilians killed or wounded

5. பாகிஸ்தான் - பாங்களாதேஷ் யுத்தத்தின் விளைவு:

Pakistan vs.Bangladesh war

Source : http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

Casualties:

India: 1,426 KIA

3,611 Wounded (Official)

Mukti Bahini: NA*

Pakistan ~8,000 KIA[citation needed]

~10,000 Wounded[citation needed]

93,000 POWs[citation needed]

Civilian death toll: Between 307,013–3,000,000[3]

6. The Real 2006 'Iraq Body Count'

16,791 Iraqi civilians killed last year by ISLAMIC Terrorists

225* Iraqi civilians killed collaterally in incidents involving Americans (and Islamic Terrorists)

Source: http://www.thereligionofpeace.com

7. இந்த அக்டோபர் மாதம் , வாராந்திர தாக்குதல்கள், மரணங்களின் எண்ணிக்கை (Weekly Jihad Report Oct. 07 - Oct. 12)

தாக்குதல்கள் - Jihad Attacks: 63

மரித்தவர்களின் எண்ணிக்கை - Dead Bodies: 359

காயப்பட்டவர்கள்- Critically Injured: 572
Source: http://www.thereligionofpeace.com

8. கடந்த இரண்டு மாதங்களில் 2521 பேர் மரித்துள்ளனர், 4060 பேர் காயப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்துள்ளது. பெரும்பானமையாக முஸ்லீம் நாடுகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

Source: http://www.thereligionofpeace.com/index.html#Attacks

9. இது வரை எத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளது, எத்தனை பேர் மரித்துள்ளார்கள், காயப்பட்டுள்ளார்கள் போன்ற விவரங்களை கிழ்காணும் தொடுப்பில் காணலாம்.

Source: http://www.thereligionofpeace.com/attacks-2007.htm

மூலம்: http://isakoran.blogspot.in/2007/10/vs.html

இதர தலைப்புகளில் உமரின் கட்டுரைகள்