2015 ரமளான் கடிதம் 12

சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

[2015 ரமளான் மாத முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இவ்வாண்டு ரமளான் மாதத்தில் கலிஃபாக்களை விமர்சித்து உமர் சில கடிதங்களை தம் தம்பிக்கு எழுதியுள்ளார். இக்கடிதத்தில், உமரின் தம்பி, உமருக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறார்.  அதாவது முஹம்மது பத்து பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று நற்செய்தி சொல்லியுள்ளார். அல்லாஹ்வினாலும், முஹம்மதுவினாலும், சொர்க்கவாசிகள் (அஷரத்துல் முபஷ்ஷரா) என்று முன்குறிக்கப்பட்டவர்கள் மீது எந்த குற்றத்தையும் நீங்கள் சாட்டமுடியாது என்று உமரின் தம்பி இக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். இதற்கு உமர் எழுதிய பதிலையும் இதே கடிதத்தில் காணலாம். இந்த அஷ்ரத்துல் முஹஷ்ஷரா என்ற ஒரு விஷயத்தைச் சுற்றியுள்ள இஸ்லாமிய இறையியல் பிரச்சனைகளை உமர் இக்கடிதத்தில் அலசுகிறார்.]

அல்லாஹ்வின் சொர்க்கவாசிகள்  - அஷரத்துல் முபஷ்ஷரா

அன்பான உமரண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் கலிஃபாக்களை விமர்சித்து எழுதிய கடிதத்தை படித்தவுடன் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன், ஆனால் மறந்தே போய்விட்டேன். உங்களுடைய நேற்றைய கடிதத்தை படித்தவுடன், அந்த முக்கியமான விஷயம் நினைவுக்கு வந்தது. அதனை உங்களுக்கு இப்போது நான் எழுதுகிறேன், கவனமாக படிக்கவும், இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் கொடுக்கப்போகும் பதிலுக்கு முன்பாக நூறு முறை சிந்திக்கவும். இது உங்களுக்கே (கிறிஸ்தவத்திற்கு) தலைவலியாக மாறக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் எங்கள் கலிஃபாக்கள் நால்வரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளீர்கள். அவர்கள் பற்றி மேலும் நீங்கள் எழுதுவதற்கு முன்பாக, அவர்களின் மேன்மையை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொருவரின் அதிமுக்கியமான ஆசை:

எந்த இறைவனை நம்புபவனாக இருந்தாலும், அவனுடைய முதல் இலட்சியம், அவன் சொர்க்கம் செல்லவேண்டும் என்பதாகும். இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துத்துவம் என்று எந்த மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், சொர்க்கம் செல்லவேண்டும் அல்லது முக்தி அடையவேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்தவர்களாகவே அவர்கள் அனைத்து காரியங்களையும் செய்கிறார்கள். இதனை நீங்களும் அறிந்துள்ளீர்கள். 

எங்கள் இறைத்தூதர் சஹாபாக்களில் பத்து பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்று நற்செய்தி கூறியுள்ளார். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது, இப்படிப்பட்ட நற்செய்தியைப் பெறுவது பாக்கியங்களிலெல்லாம் மிகப்பெரிய பாக்கியும். இந்த பத்து பெயர்களில், கீழ்கண்ட நான்கு பெயர்கள் முதலாவது வருகிறது, நீங்கள் கலிஃபாக்களை விமர்சித்தபடியினால், அவர்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.

1) அபூபக்கர் (ரலி) – முதல் கலிஃபா

2) உமர் (ரலி) – இரண்டாம் கலிஃபா

3) உத்மான் (ரலி) – மூன்றாம் கலிஃபா

4) அலி (ரலி) – நான்காம் கலிஃபா

இவர்களின் மேன்மை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மனிதன் உயிரோடு இருக்கும் போதே அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்திச் சொல்வதை வேறு எந்த மதத்திலாவது நீங்கள் பார்த்தது உண்டா? குறைந்தபட்சம் கிறிஸ்தவத்திலாவது இதனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? 

இறைத்துதர் முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக இவர்கள் இஸ்லாமிலே மிகவும் மேன்மையுள்ளவர்கள். இவர்களை அல்லாஹ்விற்கு சமமாக நீங்கள் கருதுங்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால், இவர்களின் மேன்மையை எப்படி அல்லாஹ் உயர்த்தியுள்ளான் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே இவர்களைப் பற்றி நீங்கள் எழுதப்போகும் ஒவ்வொரு வரியையும் பல முறை சிந்தித்து எழுதவும். 

எச்சரிக்கை: இஸ்லாமிய இறையியலை நீங்கள் தொட்டால், இவ்விஷயத்தைப் பற்றி கிறிஸ்தவ இறையியல் தொடப்படும் என்பதை மனதில் வைக்கவும்.

இந்த கடிதத்தைக் கண்டவுடன், இனி கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவேண்டாம். 

உங்கள் பதிலுக்காக ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இப்படிக்கு 

உங்கள் தம்பி

சௌதி அரேபியா


உமரின் பதில் கடிதம்:

சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு கர்த்தரின் கிருபையும், சாந்தியும் உண்டாவதாக.

உன் உச்சக்கட்ட விசுவாசத்தை உன் கடிதம் பிரதிபலிக்கிறது. இஸ்லாமின் மீது உனக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனால் மித மிஞ்சிய நம்பிக்கை இருக்கக்கூடாது. 

மணலைக் கொண்டு அனேக நல்ல பயனுள்ள காரியங்களைச் செய்யலாம், ஆனால், மணலின் மீது மாளிகையை எழுப்பக்கூடாது. நீ மணலின் மீது மாளிகையை எழுப்ப முடிவு செய்துள்ளாய், அந்த மாளிகை நிற்காது, சீக்கிரத்தில் தரைமட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். 

பொதுவாக நான் தான் உனக்கு எச்சரிக்கை தருவேன், ஆனால், இந்த முறை நீ என்னை எச்சரித்துள்ளாய். இஸ்லாமிய இறையியலை நான் தொட்டு எழுதினால், கிறிஸ்தவத்தின் இறையியல் உன்னால் ஆய்வு செய்யப்படும் என்ற தோரணையில் நீ எழுதியது, எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது தான் சரியான போட்டி, உனக்கு என் வாழ்த்துக்கள். உன் இஸ்லாமிய இறையியலின் இரண்டு கண்களிலும் என் விரல்களை விட்டு, ஆட்டோ ஆட்டு என்று ஆட்டாமல் நான் விடப்போவதில்லை. கிறிஸ்தவத்தின் இறையியலை தட்டிப்பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும், தழுவிப்பார்க்கவும் உன்னை அன்புடன் வரவேற்கிறேன். நீ எதைச் செய்தாலும், கிறிஸ்தவர்கள் உன்னை தட்டிவிடமாட்டார்கள், தைரியமாக நீ ஆய்வு செய்யலாம். 

முதலில், சொர்க்கவாசிகள் பற்றிய உன் கேள்விகளுக்கு விடையை கொடுத்துவிட்டு, அதன் பிறகு ”முதல் கலிஃபா மற்றும் சொர்க்கவாசி அபூ பக்கர் அவர்களின் ஆட்சி பற்றி” ஆய்வு செய்வோம்.

உபதலைப்புக்கள்

  1. சொர்க்கவாசிகள் பத்து பேர்  - ஹதீஸ்களின் சாட்சியும் முரண்பாடுகளும்
  2. இந்த பத்து பேருக்கு ”தாங்கள் சொர்க்கவாசிகள்” என்ற விஷயம் முஹம்மது உயிரோடு இருந்த போதே தெரியுமா?
  3. சொர்க்கவாசிகளும், இஸ்லாமிய இறையியலின் பிரச்சனைகளும்.
  4. முடிவுரை

-----------------------------------

1) சொர்க்கவாசிகள் பத்து பேர்  - ஹதீஸ்களின் சாட்சியும் முரண்பாடுகளும்

சொர்க்கவாசிகள் இவர்கள் தான் என்று பெயர் குறிப்பிட்டு குர்-ஆன் சொல்வதில்லை, அவைகளை நாம் ஹதீஸ்களில் காணலாம், அதுவும் ஸஹீஹ் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களில் இவைகளை காணமுடியாது. இதர ஹதீஸ் தொகுப்புகளாகிய அபூ தாவுத் மற்றும் திர்மிதியில் இவைகளை காணமுடியும்:

சுனன் அபூ தாவூத் ஹதீஸ்

Dawud :: Book 40 : Hadith 4632

Narrated Sa'id ibn Zayd: 

AbdurRahman ibn al-Akhnas said that when he was in the mosque, a man mentioned Ali (may Allah be pleased with him). So Sa'id ibn Zayd got up and said: I bear witness to the Apostle of Allah (peace_be_upon_him) that I heard him say: Ten persons will go to Paradise: The Prophet (peace_be_upon_him) will go to Paradise, AbuBakr will go to Paradise, Umar will go to Paradise, Uthman will go to Paradise, Ali will go to Paradise, Talhah will go to Paradise: az-Zubayr ibn al-Awwam will go to paradise, Sa'd ibn Malik will go to Paradise, and AbdurRahman ibn Awf will go to Paradise. If I wish, I can mention the tenth. The People asked: Who is he: So he kept silence. The again asked: Who is he: He replied: He is Sa'id ibn Zayd. 

திர்மிதி

Narrated Abdur Rahman bin Awf:

that the Messenger of Allah (sallallahu 'alayhi wa sallam) said: "Abu Bakr is in Paradise, 'Umar is in Paradise, 'Uthman is in Paradise, 'Ali is in Paradise, Talhah is in Paradise, Az-Zubair is in Paradise, 'Abdur Rahman bin Awf is in Paradise, Sa'd bin Abi Waqqas is in Paradise, Sa'id ibn Zayd is in Paradise, and Abu 'Ubaidah bin Al-Jarrah is in Paradise."

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் பெயர்கள்:

எண்

அபூ தாவுத் ஹதீஸ் தொகுப்பு

திர்மிதி ஹதீஸ் தொகுப்பு

1

முஹம்மது

அபூ பக்கர்

2

அபூ பக்கர்

உமர்

3

உமர்

உஸ்மான்

4

உஸ்மான்

அலி

5

அலி

தல்ஹா

6

தல்ஹா

ஜுபைர்

7

ஜுபைர் இப்னு அவாம்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

8

ஸைத் இப்னு மாலிக்

ஸஃது இப்னு அபீ வக்காஸ்

9

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

ஸயீது இப்னு ஸைது

10

ஸயீது இப்னு ஸைது

அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் 

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு பட்டியல்களையும், நாம் பார்த்தால், பல முரண்பாடுகளை காணமுடியும்.

திர்மிதி ஹதீஸில்: 

  • முஹம்மதுவின் பெயர் காணப்படவில்லை. 
  • ”ஸைத் இப்னு மாலிக்” என்பவரும் காணவில்லை.

அபூ தாவுத் ஹதீஸில்:

  • ”ஸஃது இப்னு அபீ வக்காஸ்” என்பவர் காணப்படவில்லை.
  • ”அபூ உதைபா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்” என்பவர் காணப்படவில்லை.

இந்த இரண்டு பட்டியலை நாம் ஒன்று சேர்த்தால், நமக்கு 12 நபர்களின் பெயர்கள் வருகின்றன. இதில் எந்த பட்டியலில் கொடுக்கப்பட்டதை சரியானதாக கருதுவது?

எண்

அபூ தாவுத் / திர்மிதி

1

முஹம்மது

2

அபூ பக்கர்

3

உமர்

4

உஸ்மான்

5

அலி

6

தல்ஹா

7

ஜுபைர் இப்னு அவாம்

8

ஸைத் இப்னு மாலிக்

9

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

10

ஸயீது இப்னு ஸைது

11

ஸஃது இப்னு அபீ வக்காஸ்

12

அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்

புகாரி மற்றும் முஸ்லிமில் இது ஏன் காணப்படவில்லை?

சுன்னி முஸ்லிம்களின் ஆறு ஹதீஸ் தொகுப்புகளில், முதல் இரண்டு தொகுப்புகளாகிய புகாரி மற்றும் முஸ்லிம் 100% ஆதாரமானவை என்று கருதப்படுகின்றது. ஆனால், இந்த சொர்க்கவாசிகள் பற்றிய ஹதீஸ் இந்த இரண்டு தொகுப்புக்களில் வராமல் விடப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்குமா? புகாரி, முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பாளர்கள், “சொர்க்கவாசிகள் பற்றிய ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ்” என்று அருதி தங்கள் தொகுப்பில் சேர்க்காமல் விட்டிருப்பார்களா? இது ஒரு முக்கியமில்லாத சாதாரண விஷயம் அல்ல. சஹாபாக்களின் மேன்மையை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு ஹதீஸ் இவர்களின் கண்களில் படாமல் விடப்பட்டதா? அல்லது பட்டதை இவர்கள் பொய் என்றுச் சொல்ல வருகிறார்களா? முதல் நான்கு கலிஃபாக்களின் காலம் முடிந்த பிறகு வந்த முஸ்லிம்கள், இந்த பத்து சஹாபாக்களின் மேன்மையை உயர்த்துவதற்கு இட்டுக் கட்டியதா இந்த ஹதீஸ்? புகாரி முஸ்லிம் ஹதீஸ்களில் கட்டாயமாக எல்லா ஹதீஸ்களும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால், இவ்வளவு முக்கியமான ஹதீஸ் விடப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. ஷியா முஸ்லிம்கள் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டியது என்று நம்புகிறார்கள். 

இந்த ஹதீஸ் உண்மை என்று கருதினால் வரும் இறையியல் பிரச்சனைகளை நான் இந்த கடிதத்தில் எழுதுகிறேன்.

2) இந்த பத்து பேருக்கு ”தாங்கள் சொர்க்கவாசிகள்” என்ற விஷயம் முஹம்மது உயிரோடு இருந்த போதே தெரியுமா?

தம்பி, நாம் இதுவரை முதல் நான்கு கலிஃபாக்களின் செயல்களை முழுவதுமாக பார்க்கவில்லை. அபூ பக்கர் ஆட்சி தொடங்கி, அலி அவர்கள் மரணிக்கும் வரைக்கும் நாம் ஆய்வு செய்தால், நமக்கு கீழ்கண்ட கேள்விகள் எழும்:

  • இவர்களா சொர்க்கவாசிகள்?
  • தாங்கள் சொர்க்கவாசிகள் என்று அவர்களுக்கு தெரிந்திருந்ததா?
  • ஒருவருக்கு இன்னொருவர் சொர்க்கவாசி என்று தெரிந்து இருந்ததா? அபூ பக்கர் சொர்க்கவாசி என்று அலிக்கு தெரியுமா?
  • இவர்களின் நடத்தைகள், சொர்க்கத்திற்கு தகுதியானவர்களின் செயல்களாக காணப்படவில்லையே? அல்லாஹ் இவர்களின் செயல்களை அங்கீகரித்தானா?
  • இவர்கள் சொர்க்கவாசிகள் என்று அல்லாஹ் சொல்லி தவறு செய்துவிட்டானா?

அலியின் அதிகார ஆசைப் பற்றியும், ஃபாத்திமாவிற்கு கிடைக்கவேண்டிய ஆஸ்தி கிடைக்கவில்லையே என்ற கோபத்தினால், முதல் கலிஃபாவிற்கு ஒத்துழைப்புத் தராமல் இருந்ததைப் பற்றியும் நாம் சுருக்கமாக பார்த்துள்ளோம். இவர்களைப் பற்றி அடுத்தடுத்த கடிதங்களில் நாம் அதிகமாக தெரிந்துக் கொள்வோம்.

இந்த கடிதத்தில், ”சொர்க்கவாசிகள் பற்றிய வஹியை அல்லது செய்தியை” முஹம்மதுவிற்கு இறக்கிய அல்லாஹ்வின் செயலினால், உண்டாகும் இறையியல் பிரச்சனையை மட்டும் பார்ப்போம்.

3) சொர்க்கவாசிகளும், இஸ்லாமிய இறையியலின் பிரச்சனைகளும்

தம்பி, இஸ்லாமிய இறையியலின் படி, இந்த பூமியிலே முஸ்லிமாக வாழும் ஒரு நபர் “நான் மரித்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வேன், அல்லாஹ் அதை கொடுப்பான், இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை” என்றுச் சொல்லக்கூடாது.  ஏனென்றால், தீர்ப்பு நாளில், இந்த முடிவை எடுப்பவன் அல்லாஹ், எனவே, மனிதர்கள் தங்கள் தரப்பிலிருந்து செய்யவேண்டியவைகளைச் செய்யவேண்டுமே ஒழிய, “எனக்கு சொர்க்கத்துக்கு டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்” என மரிப்பதற்கு முன்பு சொல்லக்கூடாது.

இது ஒரு புறமிருக்க, பத்து நபர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று முஹம்மது சொல்லியுள்ளார். மறுபடியும் இஸ்லாமிய இறையியலின் படி, முஹம்மதுவின் இந்த வார்த்தைகள் கூட ஒரு வகையான வஹி தான். இதனையும் அல்லாஹ்விடமிருந்து பெற்றுத் தான் முஹம்மது சொல்லியிருக்கிறார், ஆக, இதனை அல்லாஹ்வின் வார்த்தையாகவே கொள்ளவேண்டும். 

சஹாபாக்களில் சிலர் மரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, முஹம்மது இதனை சொல்லியுள்ளதால், இதனை முஸ்லிம்கள் நம்புவதினால், இஸ்லாமிய இறையியல் (அல்லாஹ்) கீழ்கண்ட பிரச்சனைகளை/கேள்விகளை சந்திக்கிறது:

அ) சொர்க்கவாசிகள் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவர்கள் மரிக்கும் நாள் வரை சொர்க்கவாசிகள் பாவங்களை செய்யமாட்டார்கள், அவர்கள் அல்லாஹ்வைப் போல (இனி) பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்லாஹ் வாக்கு கொடுத்தானா?

ஆ) ஒருவேளை, அவர்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும், அதனை  கண்டுக் கொள்ளமாட்டேன் என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டு, இப்படி வாக்கு கொடுத்தானா?

இ) அல்லது அவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்றபடி, முதலாவது நரகத்தில் அவர்களை தண்டித்து, அதன் பிறகு சொர்க்கத்துக்கு அனுப்பலாம் என்று அல்லாஹ் கருதினானா?

ஈ) அவர்கள் எந்த பாவம் செய்தாலும் சரி, ”நேரடி சொர்க்கம் தான்“ என்று முடிவு செய்து, அல்லாஹ் சொர்க்கவாசி ஹதீஸை இறக்கினானா?

உ) இப்படி செய்தால், அல்லாஹ்வின் இறையான்மைக்கு என்ன மதிப்பு இருக்கிறது? இதர சஹாபாக்களும் பாவங்கள் செய்தபோதும்,நேரடியாக சொர்க்கத்துக்கு அனுப்பாதது ஏன்?

ஊ) ஒரு சொர்க்கவாசி, இன்னொரு சொர்க்கவாசியோடு போர் புரிந்தாரே (அலியும், தல்ஹாவும், ஜுபைரும்), இப்படி இருக்கும் போது இவர்களை எப்படி ஒரே சொர்க்கத்தில் அல்லாஹ் அனுமதிப்பான்?

எ) ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் போர் செய்தால் அவர்கள் இருவரும், காஃபிர்கள் என்று சொல்லப்படுவதற்கு இணங்க, தல்ஹா மற்றும் ஜுபைர் அவர்கள் அலிக்கு எதிராக போர் செய்தார்களே இவர்களில் யார் காஃபிர்? அல்லது இவர்களுக்கு எதிராக போர் செய்த அலி காஃபிரா? இஸ்லாமின் படி என்ன பதில்?

ஏ) சண்டையிடும் இரண்டு முஸ்லிம்களும் காஃபிர்கள் என்றால், அவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். இதன்படி இந்த மூன்றுபேரும் நரகம் செல்வார்களா? அப்படியானால், சொர்க்கவாசிகள் என்ற ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதா?

ஐ) இப்படி இவர்கள் ஜமல் போரில் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவார்கள் என்ற எதிர்கால நிகழ்வை அல்லாஹ் அறியாமல் வாக்கு கொடுத்துவிட்டானா? 

ஒ) அல்லாஹ்விற்கு எல்லாமே தெரியும் என்றால், இவர்கள் தவறு செய்திருந்தாலும், இவர்களை சும்மாவே மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ் நினைத்தானா? இப்படி செய்தால், சஹாபாக்களிடையே பாகுபாடு உண்டாக்குவது போல ஆகுமல்லவா?

ஓ) நாம் ஏற்கனவே சொர்க்கத்தின் பிரஜையாகிவிட்டதால், இனி நல்ல அமல்கள் அதிகமாகச் செய்யத்தேவையில்லை என்று அவர்களில் ஒருவர் நினைத்திருந்தால்? மனிதர்கள் என்ற முறையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

4) முடிவுரை: 

தம்பி, சொர்க்கவாசிகள் என்ற ஹதீஸ் அல்லாஹ்வின் இறையான்மையை கேள்விக்குரியாக்குகிறது. இஸ்லாமின் இறையியலை சந்தேகிக்கிறது. மேற்கண்ட கேள்விகள் அனைத்தும், இந்த ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ் என்று சொல்வதாக உள்ளது. குர்-ஆனின் இறையியல் சொல்வதற்கு எதிராக இந்த சொர்க்கவாசிகள் ஹதீஸ் இருப்பதினால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் இதனை பொய்யான ஹதீஸ் என்று எதிர்காலத்தில் தள்ளக்கூடும்.

உன்னிடம் கடைசியாக கேட்கவிரும்பும் கேள்விகள்:

1) சொர்க்கவாசிகள் என்பதால் அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

2) இவர்களின் கடைசி கால வாழ்க்கையை பார்த்தால், மிகவும் படுகேவலமாக இருக்கிறது.  பதவிக்காக, பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொல்வது இவர்கள் மத்தியிலே சாதாரணமாக காணப்படும் ஒரு செயலாக உள்ளது. இவர்களை யார் சொர்க்கவாசிகள் என்று ஏற்றுக்கொள்வார்கள்?

3) இவர்கள் மரிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் போது, இவர்கள் சொர்க்கவாசிகள் என்று வாக்கு செய்வது சரியானதா? இது இஸ்லாமிய இறையியலுக்கும், குர்-ஆனுக்கும் எதிரானது அல்லவா?

தம்பி, நீ என்னை எச்சரிக்காதே, முதலாவது கலிஃபாக்களின், சஹாபாக்களின் நடபடிகளை அறிந்துக் கொள்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன், 

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

தேதி: 11 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்